News April 3, 2025
திருவாரூரில் தேர் பணி தீவிரம்

திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுவதால் தேரை அலங்கரிக்கும் பணி மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் திருவாரூர் ஆழி தேரை காண்பதற்கு மிக ஆவலுடன் உள்ளனர். தேரை சுற்றி வருவதற்கு நான்கு வீதிகளும் இடையூறு இல்லாமல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது.
Similar News
News April 10, 2025
திருவாரூர்: தெரிந்து வைத்திருக்க வேண்டிய உதவி எண்கள் (பாகம்-2)

திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அரசு உதவி எண்கள் (பாகம்-2). மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04366 – 221003, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, பேரிடர் கால உதவி – 1077, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04366-220510. இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
News April 10, 2025
கோட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் வீடு எரிந்து சேதம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சேந்தமங்கலம் மேலத்தெரு ஊராட்சியில் முருகானந்தம் என்பவருடைய கூரை வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான பிரகதீஷ் என்பவருக்கும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.