News August 9, 2024
திருவாரூரில் கடன் மேளா – ஆட்சியர் அழைப்பு

திருவாரூர் ஆட்சியர் இன்று (ஆக.09) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்க கடன்மேளா வரும் 14ஆம் தேதி குடவாசல்,21ஆம் தேதி வலங்கைமான்,28ஆம் தேதி நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது.கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
திருவாரூர்: புதிய மருத்துவ இணை இயக்குனர் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டத்தின் மருத்துவ இணை இயக்குனர் பணியில் மருத்துவர் S.சுரேஷ்குமார் என்பவர் நேற்று (டிச.06) புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேற்று புதிதாக பதவியேற்ற மருத்துவ இணை இயக்குனர் சுரேஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
News December 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.6) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


