News August 9, 2024

திருவாரூரில் கடன் மேளா – ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் ஆட்சியர் இன்று (ஆக.09) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்க கடன்மேளா வரும் 14ஆம் தேதி குடவாசல்,21ஆம் தேதி வலங்கைமான்,28ஆம் தேதி நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது.கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

திருவாரூர்: வாலிபரை தாக்கியவர் கைது!

image

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடுவைச் சேர்ந்தவர்கள் செல்வம் (31), ராஜேஷ் கண்ணன் (30). இருவருக்கும் இடையே 6 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உருவாகியுள்ளது. இந்நிலையில் செல்வத்தை ராஜேஷ் கண்ணன் திருப்புளியால் குத்தியுள்ளார் இதில் காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

News December 1, 2025

திருவாரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கண மழை பெய்தது. மற்றும் டிட்டா புயல் எதிரொலி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் சம்பா, மற்றும் தாளடி, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனை கணக்கெடுக்கும் பணி வருவாய்துறை மற்றும் வேளாண் துறை சார்பில் இன்று (டிச 1) தொடங்கும் என மாவட்ட வேளாண்மை இணைய இயக்குனர் பால சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!