News March 24, 2025

திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

Similar News

News November 17, 2025

திருவாரூர்: லீவ் குறித்து கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (நவம்பர் 17) வழக்கம் போல் செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் இன்று (நவம்பர் 17) கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை?

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று (நவ.17) ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 17, 2025

திருவாரூர்: முதியவர் மீது கார் மோதல்

image

வலங்கைமான் அருகே உள்ள நகரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி கண்ணன் (60). இவர் கடந்த 13-ம் தேதி அதிகாலை 6 மணி அளவில் பொய்கை பாலம் அருகில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!