News March 24, 2025

திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

Similar News

News November 13, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 12, 2025

திருவாரூர்: விவசாயிகள் வங்கி கணக்கில் 704 கோடி ரூபாய்

image

திருவாரூர் மாவட்டம், குறுவை நெல் சாகுபடியில் இதுவரை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 258573 மெட்ரிக் டன் நெல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வங்கி கணக்கு நேரடியாக 704 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு 37 ஆயிரத்து 956 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியரகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

image

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!