News April 11, 2025

திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

image

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

திருவாரூர் மாவட்டத்தில் TET தேர்வு எழுதும் 8213 பேர்

image

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 15, 16 தேதிகளில் TET தேர்வை மொத்தம் 8213 பேர் எழுதவுள்ளனர். நவம்பர் 15 அன்று நடைபெறும் TET-I தேர்வை 8 மையங்களில் 1843 தேர்வர்களும் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ள TET-II தேர்வினை 19 மையங்களில் 6370 பேரும் எழுதவுள்ளனர். தேர்வு மையத்தில் தடையில்லா மின்வசதி, குடிநீர் வசதி, அரசு போக்குவரத்து வசதி ஆகியவை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.

News November 14, 2025

திருவாரூர்: ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பம்

image

நவம்பர் 1-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறிஸ்துவ பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி 550 பேருக்கு ரூ.37,000-மும், கன்னிகாஸ்திரிகளுக்கு ரூ.60,000-மும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 28.02.2026 கடைசி தேதி என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

திருவாரூர்: பெண் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு!

image

முத்துப்பேட்டை தில்லைவிளாகத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வியின் வீட்டு ஆடு அப்பகுதியைச் சேர்ந்த மலர்கொடி என்பவரின் வயலில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மலர்கொடி செந்தமிழ் செல்வியை சாதி பெயரை கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த புகாரின் அடிப்படியில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார், மலர்கொடியை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!