News December 6, 2024
திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
ராமநாதபுரம்: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<
News December 1, 2025
தொண்டியில் பேரூராட்சி துணை தலைவர் கணவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் (52. திமுக பிரமுகர். புதுக்குடி பகுதியில் உள்ள அவரது வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காம்பவுண்டு கதவை திறக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


