News April 23, 2025

திருவள்ளூர் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 25.4.2025 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்தார். இதில் விவசாயம், மின்சாரம் கூட்டுறவு, மீன்வளம், வணிகத்துறை ஆகியவற்றின் மீது மற்றும் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்தார். *தெரிந்த விவசாயிகளுக்கு பகிரவும்*

Similar News

News November 7, 2025

திருவள்ளூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறப்பு

image

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 200 கன‌அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியின் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 7, 2025

திருவள்ளூர் வரும் துணை முதல்வர் உதயநிதி!

image

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் & பொதுமக்களுக்கு நலதிட்டங்கள் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவ.24ம் தேதி வருகை தர உள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ.6) விழா நடைபெறும் இடங்களை தேர்வு செய்து அமைச்சர் நாசர் பார்வையிட்டார். உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!