News April 9, 2025

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.86.82க்கு விற்பனை செய்யப்படும். செங்குன்றத்தில் 2.75 லட்சம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டியில் தலா 25,000 கிலோ கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 19, 2025

திருவள்ளூர் மக்களே நாளை இதை மறவாதீர்!

image

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2025

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி விலை உயர்வு

image

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி தீபாவளி முன்னிட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ ரூ.850க்கு விற்பனை செய்யப்படுகிறது. எலும்பில்லா நாட்டுக்கோழி ரூ.450, ஆட்டுமந்தை ரூ.300, நான்கு ஆட்டுக்கால்கள் ரூ.400க்கு கிடைக்கின்றன. மேலும், உயிருடன் உள்ள வாத்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News October 19, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் (18.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

error: Content is protected !!