News April 9, 2025
திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.86.82க்கு விற்பனை செய்யப்படும். செங்குன்றத்தில் 2.75 லட்சம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டியில் தலா 25,000 கிலோ கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
திருவள்ளூர்: SIR ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி!

ஆவடி மாநகராட்சி சார்பில் நடைபெறும் Special Intensive Revision–2026 தொடர்பாக வாக்காளர் விவரங்களை புதுப்பிக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2002/2005 பிறந்த வாக்காளர்கள் தங்கள் தகவல்களை https://erolls.tn.gov.in/electoralsearch/ மூலம் சரிபார்க்கலாம் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆன்லைனில் www.voters.eci.gov.in வழியாகவும் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
திருவள்ளூர்: இளம் தொழிலாளி பரிதாப பலி!

திருவள்ளூர்: புது கும்முடிபூண்டியில் சூர்யதேவ் இரும்பு உருக்காலையில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுலட்டகான்( 27) என்ற இளைஞர் பணியின் போது 30 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயத்துடன், தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 23, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (22.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


