News March 20, 2024
திருவள்ளூர்: லாரி மோதி +2 மாணவி உயிரிழப்பு

புழல் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி, அவரது மகள் ஜெயபாரதி +2 மாணவி. ஜெயபாரதியுடன் தயாநிதி பைக்கில் ஆத்தூர் மேம்பாலம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஜெயபாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தயாநிதியின் 2 கால்கள் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் பாரத் சர்மாவை போலீசார் கைதுசெய்தனர்.
Similar News
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருவள்ளூர் அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17028562>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶இந்த லிங்கில் திருவள்ளூரில் உள்ள <