News April 14, 2024

திருவள்ளூர்: ரயில் மோதி சிறுமி பலி

image

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த அன்பழகனின் மகள் மகாலட்சுமி. விடுமுறைக்கு புட்லூரில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு பழனி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது, தண்டவாளத்தைக் கடக்கையில் ரயில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 25, 2025

திருவள்ளூர்: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

image

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

News November 25, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!