News April 13, 2024
திருவள்ளூர்: முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இ.ந்.தி.யா கூட்டணியின் வேட்பாளரான சசிகாந்த் செந்திலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.அப்போது வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆளுயர மாலை அணிவிக்கபட்டது.
Similar News
News January 10, 2026
திருவள்ளூர்: தீரா நோய்கள் தீர்க்கும் அற்புத இடம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., நீங்களோ, உங்களது உறவினர், நண்பர்களோ தீரா நோயால் பாதிக்கப்பட்டவரா..? அல்லது உடல் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறீர்களா..? நமது ஊரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் நீராடி, பெருமாளை தரிசித்தால் சர்வ நோய்களும் தீர்வதோடு, புண்ணியங்களும் வந்து சேரும் என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
திருவள்ளூரில் வாலிபர் மர்ம சாவு!

திருநின்றவூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் வசித்து வந்த அருண்குமார்(25) தனது மனைவி ஷாகிதாவுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஷாகிதா பார்த்த போது, வாயில் நுரை தள்ளியவாறு அருண்குமார் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 10, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ்(34) என்பவர் போளிவாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரக்ச்ஷிற்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால், சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


