News April 4, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம். 9499055663, 8778452515, 9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE TO FRIENDS

Similar News

News November 12, 2025

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

News November 12, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதி உதவி பெரும் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். வரும் (நவ-15) ஆம் தேதிக்குள் தங்களது நில உடமை விவரங்கள், ஆதார், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் (நவ-14) அன்று காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறு அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!