News April 10, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம் 

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (10/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும். கண்டிப்பாக தேவைப்படும்.

Similar News

News November 19, 2025

பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில்கள் ரத்து

image

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வரும் 23-ந்தேதி காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

News November 18, 2025

SIR. படிவங்களை நிரப்ப உதவி மையங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அவரவர் வாக்குசாவடியில் SIR., படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகாம் வரும் நவ. 19, 20 ஆகிய நாட்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவி தேர்வு

image

தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டியில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குயிக் ஸ்பேரோ வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தவ்ஷிகா தஸ்னீம்(14) பெண் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து இவர் டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள 21 வயதிற்கு உட்பட்ட இந்திய ஜூனியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!