News April 8, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12 ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்
Similar News
News January 9, 2026
திருவள்ளூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை-தந்தை,மகனுக்கு சிறை!

திருவள்ளூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த 2021-ல், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (56) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சிறுமியின் தாயாரை, முருகனின் மகன் ராஜ்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி முருகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
திருவள்ளூர் இரவு நேர ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்போது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
மாநில அளவில் பதக்கம் வென்ற கும்மிடிப்பூண்டி மாணவர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் சேர்ந்த நகிலேஷ் 14,17, 19 வயதுக்குட்பட்ட பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஜூனியர் சிலம்பாட்டத்தில் பல சுற்றுகளின் முடிவில் வெற்றி பெற்றுவெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை பாராட்டும் வகையில் கிராமத்தினர் பேனர் வைத்து வெற்றியை கொண்டாடினர்.


