News August 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

திருவள்ளூரில் இன்று பல்வேறு பகுதிகளில் (ஆக.17) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருத்தணி, அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கடம்பூர், காக்களூர், பூண்டி, செவ்வாப்பேட்டை, தண்ணீர்குளம், பெரும்பாக்கம், பாணம்பாக்கம், மணவூர், களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, திருநின்றவூர், நத்தம்பேடு, வேப்பம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Similar News

News November 23, 2025

திருவள்ளூர் மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

image

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

திருவள்ளூர்: SIR ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி!

image

ஆவடி மாநகராட்சி சார்பில் நடைபெறும் Special Intensive Revision–2026 தொடர்பாக வாக்காளர் விவரங்களை புதுப்பிக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2002/2005 பிறந்த வாக்காளர்கள் தங்கள் தகவல்களை https://erolls.tn.gov.in/electoralsearch/ மூலம் சரிபார்க்கலாம் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆன்லைனில் www.voters.eci.gov.in வழியாகவும் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

திருவள்ளூர்: இளம் தொழிலாளி பரிதாப பலி!

image

திருவள்ளூர்: புது கும்முடிபூண்டியில் சூர்யதேவ் இரும்பு உருக்காலையில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுலட்டகான்( 27) என்ற இளைஞர் பணியின் போது 30 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயத்துடன், தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!