News August 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 17, 2025

திருவள்ளூர்: பச்சிளம் குழந்தை மரணத்தில் மர்மம்?

image

திருத்தணி: பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, மருத்துவர் அளித்த புகாரையடுத்து, குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று(டிச.16) பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருத்தணி ஒன்றியம் பி.டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், (25). இவரது மனைவி நந்தினி(21). இவர்களுக்கு தமிழரசி(3) மற்றும் ஐஸ்வர்யா என்ற பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது.

News December 17, 2025

திருவள்ளூர்: போலீஸ் அத்துமீறலா..? அழைக்கவும்!

image

திருவள்ளூர் மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

திருவள்ளூர்: போலீசிடமே பெண்களுக்கு விலை பேசிய புரோக்கர்கள்

image

ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை, காந்திநகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணைக்கு மஃப்டியில் சென்ற போலீசாரிடமே பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் விலை பேசிய முருகன்(25), பாஸ்கர்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று(டிச.16) தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!