News August 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 27, 2025

திருவள்ளூர்: மின்சார ரயில்கள் நாளை ரத்து!

image

மீஞ்சூர் – அத்திபட்டு ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் இருந்து நாளை (டிச.28) காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும், கும்மி..,-யில் இருந்து காலை 9.55, 11.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும், கடற்கரை – கும்மி.., நாளை காலை 9.40 கும்மி.., – கடற்., வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

News December 27, 2025

திருவள்ளூர்: மாட்டைக் காப்பாற்ற முயன்றவர் ஏரியில் மூழ்கி பலி!

image

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(45). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில், உற்பத்திச் சாலைக்கு சொந்தமான மாடு ஒன்று ஏரியில் சிக்கித் தவித்தது. அப்போது மாட்டைக் காப்பாற்ற சென்ற முனுசாமி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலை நேற்று(டிச.26) இரவு ஏரியில் இருந்து மீட்டனர்.

News December 27, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.26) இரவு 10 மணி முதல் இன்று காலை (டிச.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!