News August 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Similar News

News November 14, 2025

ஆவடி பகுதியில் மருத்துவ முகாம் அறிவிப்பு

image

ஆவடி மாநகராட்சியில் முதல்வர் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நாளை (நவ.15) பட்டாபிராம் சத்திரம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் நலனை முன்னிட்டு 17 துறைகளில் 43 மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. முகாம் மூலம் தேவையான சிகிச்சைகளை இலவசமாக பெற அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

News November 14, 2025

திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

News November 14, 2025

திருவள்ளூர்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்!

image

செங்குன்றம் அடுத்த புழல் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டின் முன்பு கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் முதியவர் பரதராமன் (61) என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமரவேல் மற்றும் அவரின் மாமா அருணகிரி ஆகியோர் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் பொன்னேரி நீதிமன்றம் நேற்று (நவ.13) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!