News August 6, 2024
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News December 15, 2025
திருவள்ளூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் மாவட்ட வருவாய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் உள்ளனர்.
News December 15, 2025
திருவள்ளூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் மாவட்ட வருவாய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் உள்ளனர்.
News December 15, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 145, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 88, வேலைவாய்ப்பு வேண்டி 74, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 24, இதர துறைகள் சார்பாக 102 என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


