News June 26, 2024
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 29 (திங்கள்கிழமை) ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
திருவள்ளூர்: செவிலியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு Apollo MedSkills மூலம் செவிலியர் (Nursing) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வான மாணவர்களுக்கு Parent Hospital-களில் OJT பயிற்சியும், ரூ.5,000/-ஊக்கத்தொகையும் வழங்கப்படும். 2022-2025 ஆண்டுகளில் B.Sc/GNM முடித்தவர்கள் www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
News December 31, 2025
ஆவடியில் நடைபெறும் மருத்துவ முகாம்

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி சார்பில் (ஜன.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும் இதில் பல்துறை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் சேவைகள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
News December 31, 2025
திருவள்ளூர்: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


