News June 27, 2024
திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 27) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
திருவள்ளூர்: கணவன் மீது எண்ணெயை ஊற்றிய மனைவி!

புழல், லட்சுமிபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் நிலோபர் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். காதர் பாஷா தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் இருப்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நிலோபர் நிஷா, காதர் பாஷா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 11, 2025
மனைவி கண்முன்னே கணவர் விபத்தில் பலி

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற குமார் – சுதா தம்பதி விபத்தில் சிக்கியதில் குமார் உயிரிழந்தார். ஸ்கூட்டரை இயக்கும்போது மனைவி சுதாவிடம் பேசியபடியே சென்றதால் கவனம் சிதறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மீதி மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் மனைவி சுதா கண் முன்னே குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News August 11, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.