News January 3, 2025
திருவள்ளூர் மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிரித்துள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Similar News
News September 18, 2025
திருவள்ளூரில் வெளுக்க போகும் மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருவள்ளூர் ஆட்சியார் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். 14 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 526 ஊராட்சிகளில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதம் நடைபெறும்.
News September 18, 2025
திருவள்ளூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடூமை செய்த வழக்கில் வினோத் என்பவரை பட்டாபிராம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இன்று 17.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.