News January 3, 2025

திருவள்ளூர் மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

image

‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிரித்துள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Similar News

News November 12, 2025

திருத்தணி: ரகளை செய்த இளைஞருக்கு தர்ம அடி!

image

திருத்தணியில் நேற்று(நவம்பர் 11) மாலை சிவசக்தி நகர் பகுதியில் வட மாநில இளைஞர் செங்கற்களால் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றாய் இணைந்து அத்தகைய வடமாநில இளைஞனை பிடித்து, கட்டி வைத்து அடித்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து வட மாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News November 12, 2025

திருவள்ளூர் போலீசார் எச்சரிக்கை!

image

திருவள்ளூர் மாநகர காவல் துறை சார்பில் இன்று (11.11.25) பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், போலி கடன் செயலிகளை (Fake Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அறியப்படாத இணைய தளங்கள் அல்லது நம்பகமற்ற APK கோப்புகள் மூலம் செயலிகளை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!