News May 16, 2024
திருவள்ளூர்: பேருராட்சித் தலைவர் விபத்தில் பலி.

திருவள்ளூர் அருகே திருமழிசை பேருராட்சித் தலைவர் வடிவேலு (62) (திமுக). இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இவர், தனது உறவினர் மூர்த்தியுடன் காரில் மண்ணூர் கூட்டுச்சாலையில் சென்ற போது, சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த வடிவேலு போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
திருவள்ளூர்: 49 மின்சார ரயில்கள் ரத்து!

திருநின்றவூர் நிலையப் பணிமனையில் நாளை (நவ-23) காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் 49 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 22, 2025
திருவள்ளூர்: காதலித்து ஏமாற்றியதால் கொலை!

தோட்டக்காடு மேட்டுக் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவரை ரஞ்சித் காதலித்து ஏமாற்றியதால் அந்த பெண் 4 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் தாய் மாமன் ரஞ்சித்தின் மேல் கொலை வெறியில் இருந்த நிலையில் தனது 4 நண்பர்களோடு நவ-19 ரஞ்சித்தை வெட்டி கொலை செய்துள்ளனர். அதன்பின் போலீசார், அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், விஷால், நவீன்ராஜ், விக்னேஷ், ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
News November 22, 2025
கால்நடை லைசென்ஸ் அவசியம்: ஆவடி மாநகராட்சி அறிவிப்பு

ஆவடி மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதையடுத்து, மாடு வளர்ப்போர் மாநகராட்சி அலுவலகத்தில் கால்நடைகளுக்கு லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுகளை சொந்த இருப்பிடத்திலேயே பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும், இதை மீறி சாலைகளில் காணப்படும் மாடுகள் மாநகராட்சியால் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


