News March 27, 2024

திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

image

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர்  அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 24, 2025

திருவள்ளூர்: கலப்பு திருமணத்திற்கு ரூ.20,000!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., கலப்பு திருமணம் செய்திருந்தால் அவர்களுக்கு அரசின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.20,000, BC,MBC வகுப்பை சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மாவட்ட சமூக நல அலுவல்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

திருவள்ளூர்: ரீல்ஸ் செய்த வாலிபர் கைது!

image

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ராஜதுரை (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு தாலுகா நொச்சி தலையாரி காலனியைச் சேர்ந்த இவர், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த பொதட்டூர் எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!