News March 19, 2024
திருவள்ளூர்: பயங்கரவாதிகள்…. நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News December 3, 2025
திருவள்ளூர்: மழை நிக்கப் போகுது!

திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று (டிச.3) கனமழை பெய்யக்கூடும் என்றாலும், இன்று இரவுடன் மழை ஓயும் என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மீண்டும் டிச.12ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை நிலவரம் என்ன..?
News December 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) பெய்த கனமழையால் தாமரைப்பாக்கம் 11.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 9.6 செ.மீ., பொன்னேரி 9.4 செ.மீ., சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 8.1 செ.மீ., ஆவடி 7.2 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., பூண்டி 4.7 செ.மீ., திருவாலங்காடு, பூவிருந்தவல்லி தலா 4.3 செ.மீ., பள்ளிப்பட்டு 3.6 செ.மீ., திருத்தணி 2.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
News December 3, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!


