News March 28, 2024
திருவள்ளூர்: கொலை… நாயால் சிக்கிய குற்றவாளி!

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்த நிலையில், பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்தது போலீஸ் மோப்ப நாய் டாபி என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 27, 2025
திருவள்ளூர்:லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்!

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருவள்ளூர் DSP-044-27667070, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373001951 . *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News December 27, 2025
திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
திருவள்ளூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தொடங்கி வைத்து உரையாற்றினார்.


