News October 24, 2024
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பல நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் யாரேனும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு முன் பணம் செலுத்தும்படி தெரிவித்தால் உடனடியாக அந்நபரை குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Similar News
News December 4, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 5412 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இந்த பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News December 4, 2025
திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி கொடூர பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையை சேர்ந்தவர் ஆதிமூலம்(49). இவர் சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், அப்பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனைப் பழுதுபார்க்க சென்ற ஆதி மூலம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 4, 2025
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


