News October 24, 2024
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பல நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் யாரேனும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு முன் பணம் செலுத்தும்படி தெரிவித்தால் உடனடியாக அந்நபரை குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
திருவள்ளூரில் அதிரடி மாற்றம்…SP போட்ட உத்தரவு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பது சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர்கள் உட்பட 58 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. விவேகானந்தாசுக்லா உத்தரவிட்டுள்ளார். ஒன்பது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், நான்கு பெண் காவலர்கள் உட்பட 22 காவலர்கள், 20 தலைமைக்காவலர்கள், ஏழு முதல்நிலை காவலர்கள் என, 58 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News September 19, 2025
திருவள்ளூர்: சிறுமியை சீரழித்த தந்தைக்கு அதிரடி தீர்ப்பு

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்தநிலையில் நேற்று 18.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 21 ஆண்டு கால கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.30,000அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.