News April 18, 2025

திருவள்ளூர்: இருதய நோயை குணப்படுத்தும் கோவில்

image

திருவள்ளூர், திருநின்றவூரில் அமைந்துள்ளது அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வந்து பயபக்தியுடன் பிரார்தனை செய்தால் எப்பேர்பட்ட இதய நோயானாலும் குணமாகும் என பக்தர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் குணமாக இங்கு வந்த பிரார்த்னை செய்கிறார்கள் எனவும் தகவல் உள்ளது. *நீங்களும் கண்டிப்பா போங்க. நண்பர்களுக்கும் பகிரவும்

Similar News

News October 14, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் 17ம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 9626456509.

News October 14, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி போக்குவரத்து ஊழியர் பலி

image

செங்குன்றம் அடுத்த அப்துல் மரக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது யாசின் (39). இவர், சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை புழல் ஏரியில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நண்பருடன் சென்ற முகமது யாசின், நீச்சல் கற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார்.

News October 14, 2025

திருவேற்காடு: மாணவருக்கு சரமாரி கத்தி வெட்டு

image

திருவாலங்காடு அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாமண்டூரை சேர்ந்த ராகவேந்திரன் (ம) அருங்குளத்தை சேர்ந்த தருண்குமார் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது 2 பேருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரத்தில் ராகவேந்திரனை தருண்குமார் சரமாரி தாக்கி பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராகவேந்திரனை சரமாரி வெட்டியுள்ளான். ராகவேந்திரன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

error: Content is protected !!