News March 17, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 19, 2025
8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த <
News March 19, 2025
புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்

செங்கல்பட்டு போந்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிகம், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றர். 2022ஆம் ஆண்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 19, 2025
கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் சரவணன், டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மதியம் மத்துார் பகுதியில் கொரியர் கொடுக்க பேருந்தில் சென்றார். மத்துார் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு,மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.