News April 25, 2025

திருவள்ளூர் ஆட்சியரகத்தில் ரூ.1.70 கோடியில் படிப்பகம் 

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வலதுபுறம் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அமைதியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த உரையாடல்களை மேம்படுத்துவதற்காக இப்படிப்பகம் அமைக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மு பிரதாப் தெரிவித்தார். *போட்டி தேர்வு மாணவர்களுக்கு பகிரவும்*

Similar News

News November 21, 2025

திருவள்ளூர் மக்களே… ஞாயிறு ரயில் அட்டவணையே மாறுது!

image

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் நாளை மறுநாள் நவ 23 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

News November 21, 2025

அம்பத்தூர்: தற்கொலை வழக்கில் மருத்துவர் கைது

image

அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீராவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று கைது செய்தனர்.

News November 21, 2025

திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!