News August 16, 2024

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடி கைது

image

திருவள்ளூர் அடுத்த சோழவரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக், விக்கி, சுரேஷ், உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Similar News

News November 23, 2025

திருவள்ளூர்: SIR ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி!

image

ஆவடி மாநகராட்சி சார்பில் நடைபெறும் Special Intensive Revision–2026 தொடர்பாக வாக்காளர் விவரங்களை புதுப்பிக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2002/2005 பிறந்த வாக்காளர்கள் தங்கள் தகவல்களை https://erolls.tn.gov.in/electoralsearch/ மூலம் சரிபார்க்கலாம் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆன்லைனில் www.voters.eci.gov.in வழியாகவும் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

திருவள்ளூர்: இளம் தொழிலாளி பரிதாப பலி!

image

திருவள்ளூர்: புது கும்முடிபூண்டியில் சூர்யதேவ் இரும்பு உருக்காலையில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுலட்டகான்( 27) என்ற இளைஞர் பணியின் போது 30 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயத்துடன், தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 23, 2025

திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (22.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!