News August 16, 2024

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடி கைது

image

திருவள்ளூர் அடுத்த சோழவரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக், விக்கி, சுரேஷ், உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Similar News

News November 12, 2025

திருவள்ளூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<> இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், careers@ippbonline.in என்ற இமெயில் மூலமும் தகவல்களை அறிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 12, 2025

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

News November 12, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதி உதவி பெரும் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். வரும் (நவ-15) ஆம் தேதிக்குள் தங்களது நில உடமை விவரங்கள், ஆதார், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!