News March 19, 2024
திருவள்ளூர்: அதிநவீன கேமராக்கள் துவக்கம்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 44 முக்கிய சாலைகளில் குளோவிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதிநவீன 106 IP கேமராக்கள் மற்றும் 86 ANPR கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் இன்று அதனை தொடங்கி வைத்தார்.
Similar News
News November 26, 2025
திருத்தணி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

திருத்தணி அருகே தெக்ளூர் கிராமத்தில், கடந்த மே.10ஆம் தேதி தேவாலயம் சென்று குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஜனா (21) பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற போது பெண்ணின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஜனா தப்பி ஓடினார். புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று (நவ.25) கைது செய்தனர்.
News November 26, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு ஹெல்ப் டெஸ்க், கும்மிடிபூண்டி ரயில் நிலையத்திற்கு மேற்பார்வையாளர் பணியிடம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044-27665595 என்ற எண்ணையும், மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
News November 26, 2025
திருவள்ளூர்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <


