News August 6, 2024

திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

image

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.

Similar News

News December 17, 2025

திருவள்ளூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 17, 2025

பூந்தமல்லிக்கு வருது மெட்ரோ ரயில்!

image

பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஓரிரு நாட்களில் ரயில்வே வாரியம் வேக சான்றிதழ் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக சான்றிதழ் கிடைத்தால் மேற்கண்ட பாதையில் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரமடையும்.

News December 17, 2025

திருவள்ளூரில் இலவச வக்கீல் சேவை!

image

திருவள்ளூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1)மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27660120 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!