News August 6, 2024
திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.
Similar News
News December 17, 2025
பூந்தமல்லிக்கு வருது மெட்ரோ ரயில்!

பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஓரிரு நாட்களில் ரயில்வே வாரியம் வேக சான்றிதழ் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக சான்றிதழ் கிடைத்தால் மேற்கண்ட பாதையில் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரமடையும்.
News December 17, 2025
திருவள்ளூரில் இலவச வக்கீல் சேவை!

திருவள்ளூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1)மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27660120 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
திருவள்ளூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

திருவள்ளூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!


