News May 16, 2024
திருவள்ளூரில் மழை பெய்யும்

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

திருவள்ளூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
திருவள்ளூர்: சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை!

கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி பாரதி, ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தார். அவரை பி பிரிவிலிருந்து ஏ பிரிவிற்கு மாற்ற சட்டக்கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவி பெற்றோர்களிடம் சென்று 3 லட்சத்து 90 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு 10 மணி முதல் நாளை (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


