News November 22, 2024
திருவள்ளூரில் புதிய டைடல் பார்க்; முதல்வர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.6000 பேர் பணிபுரியும் வகையில் பசுமை கட்டிடமாக இந்த டைடல் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர்: இளம்பெண் பரிதாப பலி!

திருவள்ளூர்: மாதவரம் அருகே லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம்போல் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனியின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 8, 2025
திருவள்ளூர்: வேலை வேண்டுமா..? அறிய வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் வேலை வாய்ப்பு உறுதி. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 8, 2025
திருவள்ளூரில் உடல் நசுங்கி பலி!

திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி(40), விவசாயியான இவர் நேற்று(டிச.7) காலை வயல்வெளியில் டிராக்டர் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இடுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


