News April 24, 2025
திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம்நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 24, 2025
திருவள்ளூர்: 13 வயது சிறுவன் துடிதுடித்து பலி!

ஆவடியில் ஹரிஹரன் (13) என்ற சிறுவனின் வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் குழந்தைக்காக தூளி கட்டப்பட்டுள்ள நிலையில், உறவினர் ஊருக்குச் சென்ற பிறகும், ஹரிஹரன் அந்தத் தூளியில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதனால் பெற்றோரும் தூளியை அகற்றாமல் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வழக்கம்போல் ஹரிஹரன் தூளியில் சுற்றி விளையாடும்போது, கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.
News November 24, 2025
தேசிய வில்வித்தை போட்டி பொன்னேரி மாணவி சாதனை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வெனிசா ஸ்ரீ. கடந்த மூன்று நாட்களாக உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் 69ஆவது எஸ் ஜி எஃப் ஐ தேசிய பள்ளிகள் விளையாட்டு வில் வித்தை போட்டியில் காம்பவுண்ட் போ பிரிவில் 14 வயதுக்குட்பட்டவர்க்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.
News November 24, 2025
திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (23.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


