News August 3, 2024

திருவள்ளூரில் இரவு மழை பெய்யும்

image

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

திருவள்ளூர்: சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

image

பூவை, போரூர் அருகே டியூஷன் சென்ற 8வயது சிறுவனை (டிச06) தெருநாய் கடித்துள்ளது. சிறுவன் முகம் கை, கால்களில் காயம் ஏற்பட்டு பூவிருந்தவல்லி GH சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் பூவிருந்தவல்லி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த சரளாதேவி என்பவரை நாய் கடித்துள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 7, 2025

திருவள்ளூர்: துடிதுடித்து 3 உயிர்கள் பலி!

image

திருவள்ளூர்: வெங்கல் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்ததில் வெங்கடேசன் (55) என்ற விவசாயியும், இரண்டு எருமை மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வெங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 6, 2025

திருவள்ளூர்: இன்று இரவு ரோந்து காவலர்களின் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (06.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!