News August 15, 2024
திருவள்ளூரில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரும், திமுக பிரமுகருமான ஜெகன் என்பவரது வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தும் யார்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் அதனை தடுக்க வந்த லாரி ஓட்டுரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இவற்றை ஒரே மர்மகும்பல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 18, 2025
திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.18) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News September 17, 2025
தொழிற்பயிற்சி நிலையங்கள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

2025-ஆம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம், செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News September 17, 2025
திருவள்ளூர்: சாலைகளில் கொடி, பேனர்களுக்குத் தடை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளிலும் (Centre Median), தற்காலிகமாக எந்தவிதமான கொடிகளும் அமைக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.