News August 15, 2024
திருவள்ளூரில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரும், திமுக பிரமுகருமான ஜெகன் என்பவரது வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தும் யார்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் அதனை தடுக்க வந்த லாரி ஓட்டுரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இவற்றை ஒரே மர்மகும்பல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 10, 2025
திருவள்ளூர்: மின்சாரத்தில் பிரச்னையா..? உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட், பகுதியில் மின்சாரத்தில் தடங்கல், பராமரிப்பின்மை, அதீத கட்டணம், அதிக நேர மின் தடை போன்ற மின்சாரம் சார்ந்த எவ்வித குறைகளையும் தெரிவிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டணமில்லா எண்ணான 1800-425-6000 என்ற எண்ணை அழைக்கலாம். உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 10, 2025
திருவள்ளூர்: லாரி ஏறியதில் உடல் நசுங்கி பலி!

திருவள்ளூர்: சிவன்வாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்(58) கடந்த நவ.8ஆம் தேதி இரவு 10:30 பைக்கில் திருநின்றவூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, லட்சுமி தியேட்டர் அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். எதிரே வந்த கனரக லாரி, ஜெயராஜ் மீது ஏறி இறங்கியதில் ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.மது போதையில் லாரியை இயக்கிய வட மாநிலத்தை சேர்ந்த அஜய் குமாரை(51) போலீசார் கைது செய்தனர்.
News November 10, 2025
திருவள்ளூர்: பெண்களுக்கு முக்கியமான APP!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <


