News August 27, 2024
திருவள்ளூரில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சி, நசரத் பேட்டை ஊராட்சி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருமழிசையின் ஒரு பகுதி, அம்பத்தூர், மலயாயம்பாக்கம், அகரம்மேல் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
திருவள்ளூர்: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
திருவள்ளூர்: மின்சாரத்தில் பிரச்னையா..? உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட், பகுதியில் மின்சாரத்தில் தடங்கல், பராமரிப்பின்மை, அதீத கட்டணம், அதிக நேர மின் தடை போன்ற மின்சாரம் சார்ந்த எவ்வித குறைகளையும் தெரிவிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டணமில்லா எண்ணான 1800-425-6000 என்ற எண்ணை அழைக்கலாம். உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 10, 2025
திருவள்ளூர்: லாரி ஏறியதில் உடல் நசுங்கி பலி!

திருவள்ளூர்: சிவன்வாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்(58) கடந்த நவ.8ஆம் தேதி இரவு 10:30 பைக்கில் திருநின்றவூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, லட்சுமி தியேட்டர் அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். எதிரே வந்த கனரக லாரி, ஜெயராஜ் மீது ஏறி இறங்கியதில் ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.மது போதையில் லாரியை இயக்கிய வட மாநிலத்தை சேர்ந்த அஜய் குமாரை(51) போலீசார் கைது செய்தனர்.


