News April 13, 2025
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
திருவள்ளூரில் பரபரப்பு.., வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(33). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முந்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து உதயகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதனால், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 23, 2025
திருவள்ளூர்: கடன் தொல்லையால் தற்கொலை!

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலயோகி நகரில் வசித்து வந்தவர் சிவரஞ்சன்(44). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த நவ.24ஆம் தேதி கடன் தொல்லையால் வீட்டில் இருந்து மாயமான அவர், பெருமாஞ்சேரி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரின் உடலைக் கண்டெடுத்த போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 23, 2025
திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த வாலிபர் கைது!

இருளஞ்சேரி கிராமம், கலைஞர் நகரைச் சேர்ந்த இசைமேகன் என்பவர், நேற்று முன் தினம் திருமணமாகி 3 மாதத்திலேயே கர்ப்பமான தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக தனது அண்ணியை கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், அவரது அண்ணி சாந்தி உயிரிழந்தார். இந்நிலையில், தலைமறைவான இசைமேகனை நேற்று(டிச.22) மப்பேடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


