News August 26, 2024
திருவள்ளூரின் வேடந்தாங்கல் பழவேற்காடு ஏரி

புலிகாட் ஏரி என அறியப்படும் பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கழிமுகப்பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது. பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகத்திற்கு, அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. சுற்றுலா தலத்திற்கும் பெயர் போன இடமாக பழவேற்காடு ஏரி உள்ளது .
Similar News
News November 28, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளுர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த அக்.23 அன்று ஆண் குழந்தையை பிரசவித்த தாய், எந்தத் தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் (ARM) சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருவள்ளூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 28, 2025
திருவள்ளூர்: பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்

சென்னை ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணன் என்பவருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


