News June 27, 2024
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 27) நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 3, 2025
வேலூரில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையம் ஆய்வு!

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 03) அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையமான அகரமாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) தேன்மொழி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குநர் கலைச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.
News December 3, 2025
வேலூர்: காதல் தகராறில் இளைஞர் தற்கொலை!

பள்ளிகொண்டா, பிராமணமங்கலம் புதுமனை பகுதியை சேர்ந்தவர் மோனிஷ் (29), பெங்களூருவில் உள்ள ஒரு பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், மோனிஷின் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், மோனிசுக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மோனிஷ் நேற்று (டிச.2) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
காட்பாடியில் ரூ.1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிச.3) 341 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.41 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


