News June 27, 2024

திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 5, 2026

குமரி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

குமரி மாவட்ட மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News January 5, 2026

குமரியில் 12,842 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குமரியில் 2 நாட்கள் சிறப்புமுகாம் நடந்தது. நேற்று 1914 வாக்குச்சாவடிகளில் நடந்த முகாமில் பெயர் சேர்க்க  நாகர்கோவில் தொகுதியில்- 1121, குளச்சல் 1452, பத்மநாபபுரம் 1265 , விளவங்கோடு 1077 கிள்ளியூர் 1397, கன்னியாகுமரி – 1396 என 7708 பேர் படிவம் கொடுத்தனர். 2 நாட்கள் நடந்த முகாமில் மொத்தமாக 12,842 பேர் விண்ணப்பித்தனர்.

News January 5, 2026

குமரி: 40 பவுன் திருட்டு! வேலைக்கார பெண் பலே சம்பவம்!

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த செல்லத்துரை (73) என்பவருடைய வீட்டில் 40 பவுன் தங்கம், ரூ.30,000 பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதில் 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வேலை பார்த்த பிரேமா (46) என்ற பெண்ணை போலீசார் விசாரணை செய்தனர். இதில், செல்லத்துரை வீட்டின் பீரோவை சரிவர மூடவில்லை என்பதும், அதனை கவனித்த பிரேமா, 40 பவுன் நகையை திருடிவிட்டு வேலையை விட்டு நின்றது தெரியவந்தது.

error: Content is protected !!