News June 27, 2024

திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

குமரி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் வலைவீச்சு…!

image

நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் எட்டாமடையில் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரிடம் வேர்கிளம்பியை சேர்ந்த பிரகாஷ் சிங் பணம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்பதற்காக பேரின்பராஜ் சுவாமியார் மடம் சென்ற போது அங்கு முளவிளையை சேர்ந்த 4 பேர் பைக்கில் வந்து பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

News January 8, 2026

குமரி: மூதாட்டியிடம் 5 பவுன் செயின் அபேஸ்!

image

வேங்கோடு குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி ஞான செல்வம். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஞான செல்வத்தின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இச்சம்பவம் குறித்து ஞான செல்வம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2026

குமரி: மூதாட்டியிடம் 5 பவுன் செயின் அபேஸ்!

image

வேங்கோடு குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி ஞான செல்வம். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஞான செல்வத்தின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இச்சம்பவம் குறித்து ஞான செல்வம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!