News August 9, 2024

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

76-சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, திருவள்ளுவர் சிலைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்புப்படையினர் அதிநவீன படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும், லாட்ஜூகள், ரயில், பஸ் நிலையங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

குமரி: மழை பாதிப்பு – உதவி எண்கள் வெளியீடு

image

 அகஸ்தீஸ்வரம் – மாவட்ட வருவாய் அலுவலர் -94450 00482, தோவாளை  மாவட்ட வழங்கல் அலுவலர் -94450 00391, கல்குளம்  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் -9442214997, விளவங்கோடு  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் -9445477848, கிள்ளியூர் – உதவி ஆணையர் ஆயம் – 9445074582. திருவட்டார்  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் – 9445000483 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News November 24, 2025

குமரி: கடன் தொல்லையால் இளைஞர் விபரீத முடிவு!

image

திண்டுக்கல் தோப்பம் பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (21). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த சென்னி தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பைனான்சில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்னி தோட்டத்தில் தான் தங்கி இருந்த வீட்டில் நேற்று 23-ம் தேதி விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!