News April 4, 2025

திருவண்ணாமலை கோவிலில் எஸ்.வி.சேகர் தரிசனம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சாமி தரிசனம் செய்து, விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். 

Similar News

News November 25, 2025

தி.மலை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News November 25, 2025

தி.மலை: டிராக்டர் மோதி வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி

image

சேத்துப்பட்டு அடுத்தகூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வீடுகளுக்கு டிஷ் பொருத்தும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து வீடு திருமும்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பல கனவுகளோடு வாழ்ந்தவரின் உயிர் நொடி பொழுதில் பிரிந்தது.

News November 25, 2025

தி.மலையில் கிடுகிடு உயர்வு…!

image

தி.மலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில்காய்கறிகள் விலை உயர்வு மற்றும் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இ்ல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!