News September 14, 2024
திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
Similar News
News September 16, 2025
தி.மலை: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
தி.மலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

தி.மலை மாவட்ட காவல்துறை சார்பில், போலி விளம்பர மோசடிகள் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என இதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண மோசடி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் (அ) www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. (SHARE)
News September 16, 2025
தி.மலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் இன்று (செப்.,16) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிய வையுங்கள்!