News September 14, 2024
திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
Similar News
News January 10, 2026
வந்தவாசியில் 4 பேர் அதிரடி கைது!

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே சென்னாவரம் அசோக்குமார், வந்தவாசி வெங்கடேசன், முருகன் மற்றும் புன்னை கிராமத்தைச் சேர்ந்த சிவா ஆகியோர் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களைப் பிடித்து கத்திகளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
தி.மலை: கொடூரனுக்கு வாழ்நாள் சிறை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் பழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (38) என்பவர், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தி.மலை POCSO நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (09.01.2026) தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
News January 10, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


