News September 14, 2024
திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
Similar News
News January 4, 2026
தி.மலையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

தி.மலையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News January 4, 2026
BREAKING: தி.மலை – இருவரை உயிரோடு எரித்த கணவன் கைது!

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி, திருமணம் ஆகாமல் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்த சக்திவேல், அமிர்தம் ஆகியோர் குடிசையில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில், அமிர்தத்தின் கணவரான வலசை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரை விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் கைது செய்துள்ளனர்.
News January 4, 2026
தி.மலை: மொபைல் ஃபோன் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


