News April 3, 2025
திருவண்ணாமலையில் வெப்பநிலை அதிகரிக்கும்

தி.மலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும். இந்நிலையில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். *பாதுகாப்பா இருங்க மக்களே. நண்பர்களையும் எச்சரியுங்கள்*
Similar News
News November 1, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

தி.மலை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
திருவண்ணாமலை: பிரபல நடிகை சாமி தரிசனம்

(நவ.1) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகையான தேவயானி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார். பின் அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரிடம் செல்பி எடுக்க விரும்பிய ரசிகர்களுடன் பொறுமையாக நின்று எடுத்தார்.
News November 1, 2025
திருவண்ணாமலை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட அட்டவணை

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நவம்பர் மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் கோட்ட அளவில் நடைபெற உள்ளன. வந்தவாசி – நவ.4ம் தேதி, செங்கம் நவ.6, போளுர் நவ.11, சேத்துப்பட்டு நவ.13, செய்யாறு நவ.18, திருவண்ணாமலை கிழக்கு நவ.20, ஆரணி நவ.25 , திருவண்ணாமலை மேற்கு நவ.27-ல் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் காலை 11 மணியளவில் நடைபெறும் என மின்துறை தெரிவித்துள்ளது.


