News August 27, 2024
திருவண்ணாமலையில் வழுக்குமரம் ஏறுதல், உறியடி நிகழ்வு

திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்வுகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 6, 2025
தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
தி.மலை: சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

செங்கம் அருகே கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த குப்பன் (55) கூலி வேலைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் செல்ல வந்தார். அவரை பேருந்தில் ஏற்ற மகன் இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தபோது, திருவண்ணாமலை திசையிலிருந்து வந்த கார் மோதியது. இதில் குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும் இரண்டு பேரப்பிள்ளைகளும் காயமடைந்து செங்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News December 6, 2025
திருவண்ணாமலையில் கடன் தொல்லை நீக்கும் அதிசய கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க.


