News November 24, 2024
திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 20, 2025
தி.மலை: பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது

1. உடனடியாகக் காயம்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் காட்டவும்.
2.மோதிரம் போன்ற இறுக்கமான பொருட்களை அகற்றவும்.
3.மஞ்சள், பேஸ்ட் போன்றவற்றைத் தடவுவதைத் தவிர்க்கவும்.
4. காயத்தைக் கிருமி நீக்கப்பட்ட துணியால் மூடிய பின், தாமதமின்றி உடனடியாக மருத்துவரை அணுகவும்.
5.ஆழமான காயம், இரத்தப்போக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவி பெறுவது மிக அவசியம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News October 20, 2025
தி.மலை: 12th pass போதும் 1,77,500 வரை சம்பளம்!

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 -ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
தி.மலை: பட்டாசு வெடிக்காதா ஒரு ஊரா ..?

தி.மலை மாவட்டம், வி.பி.குப்பம் கிராம மக்கள், ஆலமரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வவ்வால்களைத் தெய்வ அம்சமாகக் கருதுகின்றனர்.இவற்றிற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக, மூன்று தலைமுறைகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் இந்த வவ்வால்களை, கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் பாதுகாத்து வருவது, உயிர்காக்கும் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.