News August 8, 2024
திருவண்ணாமலையில் ஒரு வடை ரூ.28,000-க்கு ஏலம் போனது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.
Similar News
News December 9, 2025
தி.மலை: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News December 9, 2025
தி.மலை: உங்க நிலத்தை காணமா??

தி.மலை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
தி.மலை: கஞ்சா வைத்திருந்த 3 போலி சாமியார்கள் கைது

செய்யாறு வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த நிலையில் இவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 85 கிராம் கஞ்சா, 5 லிட்டர் தென்னங்கள் ஆகியவை இருந்துள்ளது. 3 போலி சாமியார்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


