News August 8, 2024

திருவண்ணாமலையில் ஒரு வடை ரூ.28,000-க்கு ஏலம் போனது

image

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.

Similar News

News November 27, 2025

தி.மலை: 3 நாட்களுக்கு கனமழை; வந்தது வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்ற அறிவிப்பு எதிரொலியால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

News November 27, 2025

தி.மலை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

தி.மலையில் பயங்கர தீ விபத்து!

image

திருவண்ணாமலை: காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பூர கடையில் நேற்று(நவ.26) இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த கடைகள் மற்றும் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

error: Content is protected !!