News August 8, 2024
திருவண்ணாமலையில் ஒரு வடை ரூ.28,000-க்கு ஏலம் போனது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.
Similar News
News December 5, 2025
தி.மலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்

தி.,மலையில் நடைபெற்ற கார்த்திகை மகா திபத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் விட்டுச் சென்ற 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு (ம) வெளி மாநிலத்திலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், கடந்த ஆண்டை விட 50 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பெளர்ணமி விழாவுக்கும் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் மீண்டும் சேர்ந்தால் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
News December 4, 2025
தி.மலை: உங்களிடம் பைக், கார் இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <
News December 4, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


