News August 8, 2024

திருவண்ணாமலையில் ஒரு வடை ரூ.28,000-க்கு ஏலம் போனது

image

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.

Similar News

News November 18, 2025

தி.மலை: மனைவிக்கு சரமாரி அடி – கணவன் கைது!

image

தி.மலை: பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, செவ்வந்தி. கணவன் மனைவியான இவர்கள், கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று கணவர் வீட்டில் இருந்த 9 வயது மகளை அழைத்துச் செல்ல செவ்வந்தி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபு தனது உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

News November 18, 2025

தி.மலை: மனைவிக்கு சரமாரி அடி – கணவன் கைது!

image

தி.மலை: பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, செவ்வந்தி. கணவன் மனைவியான இவர்கள், கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று கணவர் வீட்டில் இருந்த 9 வயது மகளை அழைத்துச் செல்ல செவ்வந்தி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபு தனது உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

News November 18, 2025

தி.மலையில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்!

image

திருவண்ணாமலை கஸ்தம்படி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்–ஜோதி தம்பதி, நிலத்தகராறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதியர் தீக்குளிக்க முயன்றதில், பூங்கொடி என்பவர் உயிரிழந்தார். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

error: Content is protected !!