News August 18, 2024

திருமூர்த்தி அணை இன்று திறப்பு

image

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94,121 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 2-ம் மண்டல பாசனத்திற்கு இன்று முதல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுகளில் 8000 மில்லியன் கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 2, 2025

திருப்பூர்:10th போதும் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 2, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு, வெங்கடாசலபுரம், கருவம்பாளையம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர், ராயபுரம், குமரப்பபுரம், சூசையப்பபுரம், மிலிட்டரி காலனி, கோழிப்பண்ணை, அணைப்பாளையம், பெரியாண்டிபாளையம், கொங்கணகிரி கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 2, 2025

பல்லடம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

பொங்கலூர் அருகே உள்ள கண்டியன்கோவில் உப்புக் கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி மயிலாத்தாள்(65). கடந்த சில மாதங்களாக இவர், உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட் டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயிலாத்தாள் உயிரிழந்தார்.

error: Content is protected !!