News March 25, 2025
திருமானூர் அருகே பைக் மோதி வாலிபர் பலி

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான கோபிநாத், நேற்று காலை தனது நண்பருடன் பைக்கில் புள்ளம்பாடி- திருமானூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாக்கியநாதபுரம் கல்லறை தோட்டம் அருகே, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
அரியலூர்: வாராந்திர சிறப்பு விசாரணை முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் உத்தரவின்படி, இன்று (நவ.12) அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் 41 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து மனுக்களை அளித்தனர். மனுதாரர்களின் புகார்களை கேட்டுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
News November 12, 2025
அரியலூர்: அரசு வங்கியில் வேலை

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 12, 2025
அரியலூர் பறவைகள் சரணாலயம் பற்றி தெரியுமா?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!


