News March 25, 2025

திருமானூர் அருகே பைக் மோதி வாலிபர் பலி

image

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான கோபிநாத், நேற்று காலை தனது நண்பருடன் பைக்கில் புள்ளம்பாடி- திருமானூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாக்கியநாதபுரம் கல்லறை தோட்டம் அருகே, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

அரியலூர்: காவாத்து பயிற்சியில் ஈடுபட்ட காவலர்கள்

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜெயங்கொண்டம் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் இன்று காவாத்து பயிற்சியில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

அரியலூர்: பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி இறப்பு

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பெரிய கருப்பை ஆலமரம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 15, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!