News August 14, 2024
திருமானுரில் மனைவியை எரித்து கொன்ற கணவர்

திருமானூரை அடுத்த வெங்கனூா் கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் சுரேஷ்குமாா் (36). இவரது மனைவி அனிதா(28).இருவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக சண்டை நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த (5.11.2021) அனிதாவின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுரேஷ்குமாா் தீ வைத்தாா். இதில், பலத்த காயமடைந்த அனிதா உயிரிழந்தாா். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
Similar News
News January 5, 2026
அரியலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

அரியலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
News January 5, 2026
அரியலூர்: குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டது.
News January 5, 2026
அரியலூர்: 23,288 குடும்பங்கள் தாயுமானவர் திட்டத்தில் பயன்

தாயுமானவர் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் மூலம், குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.


